கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics PDF Tamil

கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics Tamil PDF Download

Free download PDF of கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics Tamil using the direct link provided at the bottom of the PDF description.

DMCA / REPORT COPYRIGHT

கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics Tamil - Description

Hello friends, today we are going to upload கந்தர் அநுபூதி PDF / Kandar Anuboothi Lyrics PDF to help you all. If you are looking for Gander Anubhuti Lyrics PDF in Tamil and can’t find it anywhere, don’t worry you are on the right page. Gander Anubhuti Nool was sung by Arunagirinath. Made up of 51 virtues. There is a backup verse alone. ‘Anu’ is experience. ‘Boothi’ means intellect. The rise of knowledge. Enjoy the boom of experiential knowledge. All songs are in the status quo genre. The songs are in tune with the rhythmic flow.
Thirumoolar Idayan entered the body and said Thirumandiram. Arunagiri Nathar is said to have narrated this thread from inside Kli’s body. Religious people say that this book is like the tenth edition of Thirumanthiram. It is also said to be the best recitation song.

கந்தர் அநுபூதி PDF । Kandar Anuboothi Lyrics PDF In Tamil

காப்பு:
விபூதி தியானம்
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல்

  1. மதயானையை வெல்ல
    ஆடும் பணிவே லணிசே வலெனப்
    பாடும் பணிவே பணியா யருள்வாய்
    தேடுங் கயமா முகனைச் செருவிற்
    காடுந் தனியா னைசகோ தரனே.
  2. வணங்காரை தண்டிக்க
    உல்லாச நிராகுல யோக விதச்
    சல்லாப விநோதனு நீயலையோ
    எல்லாமற என்னை யிழந்த நலஞ்
    சொல்லாய் முருகா கரபூ பதியே.
  3. கல்வியில் மெச்ச
    வானோ புனல்பார் கனல்மா ருதமோ
    ஞானோ தயமோ நவில்நான் மறையோ
    யானோ மனமோ எனையாண் டவிடந்
    தானோ பொருளா வதுசண்முகனே.
  4. துறவு பெற
    வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
    தளைபட் டழியத் தகுமோ தகுமோ
    கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
    தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
  5. மாயை ஒழிக்க
    மகமாயை களைந்திட வல்ல பிரான்
    முகமாறு மொழிந்து மொழிந் திலனே
    அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
    சகமாயையுள் நின்று தயங் குவதே.
  6. மாதரைத் தழுவ
    திணியா னமனோ சிலைமீ துனதாள்
    அணியா ரரவிந்த மரும்பு மதோ
    பணியா வென வள்ளி பதம் பணியுந்
    தணியா வதிமோத தயா பரனே.
  7. தீராப்பணி தீர
    கெடுவாய் மனனை கதிகேள் கரவா
    திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
    விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
  8. குடிகளை தன்வசமாக்க
    அமரும் பதிதே ளகமா மெனுமிப்
    பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பொரு தானவ நாசகனே.
  9. பெண்ணாசை ஒழிக்க
    மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
    தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
    திட்டூர நிராகுல நிர்ப் பயனே.
  10. நமனை விலக்க
    கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
    தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
    தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
    சூர்மா மடியத் தொடுவே லவனே.
  11. தணிகை சேர்க்க
    கூகா வெனவென் கிளைகூ டியழப்
    போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
    தாகாசல வேலவ நாலு கவித்
    தியாகா கரலோக சிகா மணியே.
  12. களவு வெல்ல
    செம்மான் மகளைத் திருடுந் திருடன்
    பெம்மான் முருகன் பிறவா னிறவான்
    சும்மா இருசொல் லறவென் றலுமே
    அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.‘
  13. இருள் வழி நடக்க
    முருகன் தனிவேல் முனிநங் குருவென்
    றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
    உருவன் றருவன் றுளதன் றிலதன்
    றிருளன் றொளியன் றென்நின் றதுவே.
  14. பாரி தரிசனம் செய்ய
    கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
    றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
    மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
    ஐவாய் வழி செல்லு மவாவினையே.
  15. அஷ்டாவதனம் செய்ய
    முருகன் குமரன் குகனென்று மொழிந்
    துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
    பொருபுங் கவரும் புவியும் பரவுங்
    குருபுங்கவ எண்குண பஞ் சரனே.
  16. பேராசை விலக்க
    பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
    டோ ரா வினையே னுழலந் தகுமோ
    வீரா முதுசூர் படவே லெறியுஞ்
    சூரா சுரலோக துரந் தரனே.
  17. தன்னடத்தை மேன்மையாக்க
    யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
    தாமே பெற வேலவர் தந்தனாற்
    பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
    தாமேல் நடவீர் நடவீ ரினியே.
  18. கற்பழியாதிருக்க
    உதியா மரியா வுணரா மறவா
    விதிமா லறியா விமலன் புதல்வா
    அதிகா வநகா வபயா வமரா
    பதிகா வலசூர் பயங் கரனே.
  19. இல்வாழ்க்கை நீக்க
    வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
    குடியுங் குலமுங் குடிபோ கியவா
    அடியந் தமிலா அயில்வே லரசே
    மிடி யென்றொரு பாவி வௌவீப் படினே.
  20. அனுக்கிரகம் பெற
    அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
    உரிதா வுபதேச முணர்ந் தியவா
    விரிதாரண விக்ரம் வேளி மையோர்
    புரிதா ரக நாக புரந்தரனே.
  21. திருவடி வணங்க
    கருதா மறவா நெறிகாண எனக்
    கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
    வரதா முருகா மயில்வா கனனே
    விரதா கரசூர விபாட ணனே.

22.தவம் பெற
காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.

    1. சலிகை சொல்ல
      அடியைக் குறியா தறியா மையினால்
      முடியக் கெடவோ முறையோ முறையோ
      வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
      கொடியைப் புணருங் குணபூத ரனே.
    2. மாதர் வலையில் விழாதிருக்க
      கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
      சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
      சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
      போர்வேல புரத்தா பூப தியே.
    3. மகாவினை ஒழிக்க
      மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
      தையோ அடியே னலையத் தகுமோ
      கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
      செய்யோய் மயிலே றிய சேவகனே.
    4. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக
      ஆதார மிலே னருளைப் பெறவே
      நீதா னொரு சற்று நினைந்திலையே
      வேதாகம ஞான விநோ தமனோ
      கீதா சுரலோக சிகா மணியே.
    5. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க
      மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
      என்னே விதியின் பயனிங் கிதுவோ
      பொன்னே மணியே பொருளே யருளே
      மன்னே மயிலேறிய வானவனே.
    6. தான் அவனாக
      ஆனா அமுதே அயில்வே லரசே
      ஞானா கரனே நவிலத் தகுமோ
      யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
      தானாய் நிலைநின் றதுதற் பரமே.
    7. கடவுள் முன் கோபம் மாற்ற
      இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
      பொல்லே னறியாமை பொறுத் திலையே
      மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
      சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
    8. வழக்கு பேச
      செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
      றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
      அவ்வா றறிவா ரறிகின் றதலால்
      எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
    9. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற
      பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
      வீழ்வா யென என்னை விதித்தனையே
      தாழ்வா னவைசெய் தனதா முளவோ
      வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
    10. கொலை மறக்க
      கலையே பதறிக் கதறிக் தலையூ
      டலையே படுமா றதுவாய் விடவோ
      கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
      மலையே மலை கூறிடு வாகையானே.
    11. வியாகூலம் ஒழிக்க
      சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
      விந்தா டவியென்று விடப் பெறுவேன்
      மந்தா கினிதந்த வரோ தயனே
      கந்தா முருகா கருணா கரனே.
    12. பெண்களைத் தாயாக நினைக்க
      சிங்கார மடந்தையர் தீநெறி போய்
      மங்கார லெனக்கு வரந்தருவாய்
      சங்க்ராம சிகா வலசண் முகனே
      கங்கா நதி பால க்ருபாகரனே.
    13. சரீர வாஞ்சை ஒழிக்க
      விதிகாணு முடம்பை விடா வினையேன்
      கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
      மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
      துதியா விரதா சுரபூ பதியே.
    14. கடவுளைக் காண
      நாதா குமரா நமவென் றரனார்
      ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
      வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
      பாதா குறமின் பதசே கரனே.
    15. தனது அகந்தையை ஒழிக்க
      கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
      பரிவா ரமெனும் பதமே வலையே
      புரிவாய் மனனே பொறையா மறிவால்
      அரிவா யடியொடு மகந் தையையே.
    16. பிசாசம் ஒழிக்க
      ஆதாளிணீய யொன் றறியே னையறத்
      தீதாளியை யாண் டதுசெப் புமதோ
      கூதாள கிராத குலிக் கிறைவா
      வேதாள கணம் புகழ்வே லவனே.
    17. ஜனனம் எட்டாதிருக்க
      மாவேழ் சனனங் கெடமா யைவிடா
      மூவேடணை யென்று முடிந் திடுமோ
      கோவே குறமின் கொடிதோள் புணருந்
      தேவே சிவ சங்கர தேசிகனே.
    18. மாயை தெளிய
      வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
      மனையோடு தியங்கி மயங் கிடவோ
      கனையோ டருவித் துறையோடு பசுந்
      தினையோ டிதணோடு திரிந் தவனே.
    19. நித்திய தேகம் பெற
      சாகா தெனையே சரணங் களிலே
      காகா நமனார் கலகஞ் செயுநாள்
      வாகா முருகா மயில்வா கனனே
      யோகா சிவஞா னொபதே சிகனே.
    20. நின்ற நிலை நிற்க
      குறியைக் குறியாது குறித்தறியும்
      நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
      செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
      றறிவற் றறியா மையு மற்றதுவே.
    21. ஆசானாகி அனுக்கிரகிக்க
      தூசா மணியுந் துகிலும் புனைவாள்
      நேசா முருகா நினதன் பருளால்
      ஆசா நிகளந் துகளா யின்பின்
      பேசா அநுபூதி பிறந் ததுவே.
    22. குரு மந்திரம் பெற
      சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
      சூடும் படிதந் ததுசொல் லுமதோ
      வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
      காடும் புனமுங் கமழுங் கழலே.
    23. கல்வியிற் சம்பாவிக்க
      கரவா கியகல்வி யுளார் கடைசென்
      றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
      குரவா குமரா குலிசா யுதகுஞ்
      சரவா சிவயோக தயா பரனே.
    24. மனவருத்தம் தீர
      எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
      சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
      கந்தா கதிர்வே லவனே யுமையாள்
      மைந்தா குமரா மறைநா யகனே.
    25. ஆனந்த நடனம் காண
      ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
      பேறா வடியேன் பெறுமா றுளதோ
      சீறா வருசூர் சிதைவித் திமையோர்
      கூறா வுலகங் குளிர்வித் தவனே.
    26. தற்சொரூபம் காண
      அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
      பிறிவொன் றறநின் றபிரா னலையோ
      செறிவொன் றறவந் திருளே சிதைய
      வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.
    27. தன்னை அறிந்து கொள்ள
      தன்னந் தனிநின் றதுதா னறிய
      இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
      மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
      கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.
    28. அவா அறுக்க
      மதிகெட்டறவா டிமயங் கியறக்
      கதிகெட்டவமே கெடவோ கடவேன்
      நதிபுத்திர ஞான சுகா திபவத்
      திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
    29. நினைத்தபடி தரிசனம் கொடுக்க
      உருவா யருவா யுளதா யிலதாய்
      மருவாய் மலராய் மணியா யொளியாய்
      க்கருவா யுயிராய்க் கதியாய்
      விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே.
      கந்தர் அநுபூதி முற்றிற்று.

you can download the free கந்தர் அநுபூதி PDF । Kandar Anuboothi Lyrics PDF by clicking on this link.

Download கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics PDF using below link

REPORT THISIf the download link of கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If கந்தர் அநுபூதி | Kandar Anuboothi Lyrics is a copyright material Report This by sending a mail at [email protected]. We will not be providing the file or link of a reported PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *